Home உலகம் சியரே லியோன் மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு

சியரே லியோன் மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சியரே லியோனில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இந்த மண்சரிவு அனர்த்தம் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 600 என தெரிவிக்கப்படுகிறது.

சியரே லியோனின் தலைநகர் ப்ரீடவுனில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் பாரியளவில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தோரை அடக்கம் செய்ய பாரிய புதைகுழியொன்று வெட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காணாமல்  போயுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சியரேலியோன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More