Home இலங்கை நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படுவாரா?

நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படுவாரா?

by admin

நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவின் உப காவல்துறை அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில்,  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை கைது செய்ய, அதிகாரம் உள்ளதாக, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான், தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் முன்னிலையாகுமாறு  அழைப்பாணை விடுக்குமாறு   நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திடம் விடுத்திருந்த  கோரிக்கையை பரீசிலித்த போதே, கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்,   நாமல் ராஜபக்ஸ, தனக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில், உப காவல்துறை அதிகாரி காவல்துறைமா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளார்.

நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவு வளாகத்தில் வைத்து  விசாரணைப்பிரிவின் தொகுதி இலக்கம் 7இல் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மஹிந்த ராஜபக்ஸவும் உடனிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த புதன்கிழமை விசாரணை ஒன்றுக்காக   ரோஹித ராஜபக்ஸ   நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே,   நாமல் ராஜபக்ஸ குறித்த அதிகாரிக்கு இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More