நாவற்குழி உள்ள வீடு ஒன்றில், மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 3 கிலோ 500 கிராம் கஞ்சாவை, யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்றிரவு மீட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேகத்தின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் சந்தேகநபரும் சாவகச்சேரி காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment