இலங்கை பிரதான செய்திகள்

சுன்னாகம் காவல்நிலையத்தில் சந்தேக நபரை சித்திரவதை செய்து கொலை செய்த காவல்துறை உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ் சுன்னாகம் காவல்நிலையத்தில் வைத்து கடந்த 2011ம் ஆண்டு சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் நான்காம்; திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஐந்து இளைஞர்களை கைது செய்த யாழ் சுன்னாகம் காவல்துறையினர் அவர்கள்; மீது மேற்கொண்ட சித்திரவதை காரணமாக யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமனன் என்;ற இளைஞர்  உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின்  சடலத்தை கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் வீசிவிட்டு குறித்த இளைஞர் தப்பியோடி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர்  தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த யூலை மாதம் 25ம் திகதி குறித்த வழக்கு மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்;றம் சாட்டப்பட்ட ஏனைய இளைஞர்கள் மன்றில் ஆஜராகி பரபரப்பு வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியிருந்தனர்.
தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தங்களை கைது செய்த சுன்னாகம் காவல்துறையினர் சுன்னாகம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து அடித்து  மின்சாரம் பாய்ச்சி சித்திரவதைக்குட்படுத்தினர் எனவும் இந்த சித்திரவதையின் காரணமாக தமது நண்பனான சுமன் என்பவர் இறந்து விட்டார் எனவும் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

இதன் பின்னர் இவ்வழக்கு சட்டமா அதிபர் திணைக்;களத்திற்கு ஆலோசனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கு அமைய எட்டு  காவல்துறையினருக்கு  எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் சித்திரவதை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இதில் ஐந்து பேருக்கு எதிரான வழக்கு சடலம் மீட்க்கப்பட்ட பிரதேசத்திற்குரிய கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் கொலைக்குற்றச்சாட்டுவழக்குப்; பதிவு செய்யவும் சட்டமா அதிபர் திணைக்களம் அலோசனை வழங்கியிருந்தது.

இதன்படி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து காகவல் உத்தியோகத்தர்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற பதில்  நீதிவான் எஸ்.சிவபால சுப்பிரமணியம்  அவர்களின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 04ம் திகதிவரையும்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்;பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.