Home இலங்கை கள்வர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள பதவிவிலகுகின்றனர் – ஜே.வி.பி.

கள்வர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள பதவிவிலகுகின்றனர் – ஜே.வி.பி.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கள்வர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள பதவிவிலகுகின்றனர்   என ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்   இதனைத் தெரிவித்துள்ள அவர்  அரசாங்கம் கள்வர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஜனவரி 8 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிரத்தைக் காட்டவில்லை என தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்காக ஜனாதிபதியும் பிரதமரும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் தண்டனை வழங்குவதற்கு முனைப்பு காட்டாது அவர்களை தண்டனையிலிருந்து தப்பிக்கச் செய்வதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More