Home இலங்கை அமெரிக்க உயர் அதிகாரியொருவர் இலங்கைக்கு வரவுள்ளார்.

அமெரிக்க உயர் அதிகாரியொருவர் இலங்கைக்கு வரவுள்ளார்.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்க உயர் அதிகாரியொருவர் இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க பதில் ராஜாங்கச் செயலாளர் அலிஸ் வேல்ஸ்  என்பவரே இலங்கைக்கு வர உள்ளார்.

பல நாடுகளுக்கு வேல்ஸ் பயணம் செய்து வருவதாகவும் இதன் அடிப்படையில் இலங்கைக்கும் பயணம  செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 31ம் திகதி இந்து சமுத்திர மாநாடு ஒன்று கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் இந்த மாநாட்டில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி அலிஸ் வேல்ஸ் உரையாற்ற உள்ளார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More