Home இலங்கை இருபது வருடங்களாக உள்ளுராட்சி மன்றங்களில் ஆளணி உருவாக்கம் இல்லை – அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு:-

இருபது வருடங்களாக உள்ளுராட்சி மன்றங்களில் ஆளணி உருவாக்கம் இல்லை – அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

வடக்கில் இருபது வருடங்களாக ஊழியர்கள் ஆளணி உருவாக்கம் மேற்கொள்ளப்படவில்லை எனவும்  இதனால் இருபது வருடங்களுக்கு முன் காணப்பட்ட சனத் தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட் ஆளணியினரே தற்போதும் பணியாற்றி வருகின்றனர் எனவும் அகில இலங்கை  அரசாங்க பொது ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனா்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளா் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இந்த இருபது வருடங்களில் சனத் தொகை அதிகரித்திருக்கிறது போதும்  பிரதேச  சபைகள் நகர சபைகளாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும்   தேவைகளும், சேவைகளும் அதிகரித்துள்ளது.

 
இப்படி எல்லாம் அதிகரித்த நிலையில் காணப்பட ஊழியர்களின் ஆளணி மட்டும் பழைய நிலையிலேயே உள்ளதனால்   ஊழியர்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என்பதுடன்  பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை எனவும்  பல வெற்றிடங்களுக்கு அளணி நிரப்படவில்லை எனவும்  இந்த நிலைமை நீண்ட காலமாக தொடர்கிறது எனவும்  அகில இலங்கை அரசாங்க  பொது  ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சரின் கவனத்திற்கு மேற்படி விடயம் தொடர்பில் பல தடவைகள் கொண்டு சென்ற போதும் அவரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,  வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம்  இன்னும் ஒரு வருடமும் ஒரு மாதமுமே இந்தக் காலத்திற்குள் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிகையில்லை எனவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

 

மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடுகளும் உள்ளுராட்சி  திணைக்களத்தின் செயற்திறனற்ற  நிலைமையுமே இதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்கள்.

அத்தோடு தற்போதைய நிலைமைக்கு ஏற்ப ஆளணி உருவாக்கம் செய்யப்பட்டு ஊழியர்கள் உள்வாங்கப்படுவாh்களாக இருந்தால் சுமார் மூவாயிரம் பேருக்கு வடக்கில் வேலைவாய்பபை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

அகில இலங்கை  அரசாங்க பொது ஊழியர் சங்கமானது ஊழியர்களின் நலன்கள் சார்ந்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஒரு தலைமைத்துவதின் கீழ் செயற்படுகின்றோம் எனவே அதனை குழப்பும் வகையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளா்கள் செயற்பட்டு வருகின்றனா்.
எங்களுடைய சங்கத்தின் கடித தலைப்பை மோசடியாக பயன்படுத்தியுள்ளதோடு, சங்கத்தின் புதிய செயலாளரையும் தாக்கியுள்ளனா். எனவே நாம் இவா்களின் இ்வவாறான நடவடிக்கை தொடரும் பட்சத்தில் நீதிமன்றம் செல்வதற்கும் ஆலோசித்து வருகின்றோம் எனவும் தெரிவித்தனா்.
 இப் பத்திரிகையாளர் சந்திப்பில் அகில இலங்கை  அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் உப தலைவர் அ.அன்ரனி, நிர்வாக ஆலோசகர் செ.இராசையா, கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியா .இணைப்பாளர்களான ஆ.புண்ணியமூர்த்தி,சி. சற்குணராஜா, ந.தேவகிருஸ்ணன்,ஆ.சூரியகுமாா் ஆகியோரும் கலந்துகொண்டனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More