Home இலங்கை கிளிநொச்சி இரணைத்தீவில் ஒரு பகுதி விடுவிக்க கடற்படையினர் இணக்கம்

கிளிநொச்சி இரணைத்தீவில் ஒரு பகுதி விடுவிக்க கடற்படையினர் இணக்கம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவின் ஒரு பகுதியை  விடுவிப்பதற்கு  கடற்படையினா் இணக்கம் தெரிவித்துள்ளனா்.  இன்று இரணைத்தீவில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது இது தொடர்பில்  தெரிவிக்கப்பட்டது.

தங்களது பூர்வீக  இடத்தில் மீள குடியேற வேண்டும் என வலியுறுத்தி இரணைத்தீவு மக்கள் தொடர்  கவனயீர்ப்பு போராட்டத்தை    123  நாளாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பாதுகாப்ப இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்தன, மீள்குடியேற்ற அமைச்சர் டிஎம். சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிறிதரன்,  பாதுகாப்பு துறை அதிகாரிகள், பங்குதந்தையர்கள்  கடற்படையினா் ஆகியோருக்கிடையில்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விணக்கம் ஏற்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு இரணைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது இரணைமாதாநகர் கிராமத்தில் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களது பூர்வீக நிலங்களில் குடியமரவும் அங்கு தங்கி நின்றி தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்படவும் வலியுறுத்தி   தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இனிவரும் நாட்களில் விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ள பகுதிகளில் காணிகளை அடையாளப்படுத்தும்   நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More