Home இலங்கை உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ படைவீரர்களுக்கு தண்டனை விதிக்க இடமளிக்கப்படாது – தலதா அதுகோரள

உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ படைவீரர்களுக்கு தண்டனை விதிக்க இடமளிக்கப்படாது – தலதா அதுகோரள

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ படைவீரர்களுக்கு தண்டனை விதிக்க இடமளிக்கப்படாது என நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். இலங்கையின் சுயாதீனத்தன்மையும் நாட்டையும் அர்ப்பணிப்புடன் பாதுகாப்பதற்கு பங்களிப்பு வழங்கிய படைவீரர்களுக்கு உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தண்டனை விதிக்கப்பட அனுமதிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி அமைச்சில் நடைபெற்ற நீதி அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போது   இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் இது தொடர்பில் தாம் பொறுப்புடன் உறுதியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம்  அரசியல் லாபங்களின் அடிப்படையில் படைவீரர் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், மெய்யாகவே படைவீரர்களை பாதுகாக்க முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More