Home இலங்கை ஜகத் ஜயசூரிய யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கு ஆதாரம் உண்டு

ஜகத் ஜயசூரிய யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கு ஆதாரம் உண்டு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கு ஆதாரம் உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில், ஜகத் ஜயசூரிய வவுனியா பகுதியில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் எனவும் அதன் பின்னர் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்திலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டா எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற போது யுத்த கள நடவடிக்கைகளை ஜகத் ஜயசூரிய கட்டுப்படுத்தவில்லை என்ற போதிலும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற போது சரணடைந்தவர்கள் தொடர்பில் ஜகத் ஜயசூரியவே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஜகத் ஜயசூரிய யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜகத் ஜயசூரியவிற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆதரவளித்து வந்தார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More