Home இலங்கை சர்வதேச நடன போட்டியொன்றில் கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞன் முதலிடம்

சர்வதேச நடன போட்டியொன்றில் கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞன் முதலிடம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியாவில் இடம்பெற்ற  பல நாடுகள் பங்குகொண்ட  சர்வதேச ரீதியிலான நடனப் போட்டியொன்றில்  இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞன் முதலாம் இடத்தை பெற்றுள்ளாா்.
கடந்த யூலை மாதம்  வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்பட்ட ஹிடின் ஜடியல் தேசிய  மட்ட போட்டியில் முதலாம் இடத்தைப்  பெற்று சிறந்த ஆற்றுகையாளராக தெரிவு செய்யப்பட்ட  மலையாளபுரம் இலங்கரட்ணம் சஜித் என்ற இளைஞரே இந்தியா சிதரம்பத்தில் இடம்பெற்ற போட்டியில்  வெற்றிப்பெற்றுள்ளாா்.
22 தொடக்கம் 28 வயது பிரிவுப்  போட்டியில் இந்தியா உட்பட பல நாட்டுப் போட்டியாளர்களுடன் போட்டியிட்டே சஜித் முதலாம் இடத்தை பெற்றுள்ளாா்.ஹிடின் ஜடியல் அமைப்பானது ஆறாவது தடவையாக ஹிடின் ஜடியல் 2017 நிகழ்வை இந்தியா சிதரம்பத்தில் கடந்த மாதம் நடத்தியிருந்தது.
இதேவேளை இவரது சகோதரி இலங்கரட்ணம் சுசானி என்பவா் 16-21 வயது பிரிவு போட்டியில்  தேசிய மட்டத்தில்  இரண்டாம் இடத்தை பெற்றவா் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More