Home இலங்கைசரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றில் விரிவான தகவல்களை வெளியிடவுள்ளார்.

சரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றில் விரிவான தகவல்களை வெளியிடவுள்ளார்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் கருத்து தனிப்பட்ட அடிப்படையிலானது என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து தனிப்பட்ட அடிப்படையிலானது எனவும் அது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் இன்னும் இரண்டு வாரங்களில் விரிவான தகவல்களை பாராளுமன்றில் வெளியிடுவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, கட்சியின் அமைச்சர்களது கருத்து கட்சியின் கருத்து கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் வெளியிடும் கருத்து தனிப்பட்ட ரீதியானதாகவே கருதப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More