Home உலகம் பிரான்சில் இன்று 2 தாக்குதல்கள் – பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்தில் விசாரணைகள்

பிரான்சில் இன்று 2 தாக்குதல்கள் – பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்தில் விசாரணைகள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்சில் இனந்தெரியாத நபர் ஓருவர் சுத்தியலால்  மேற்கொண்ட தாக்குதலில் இரு பெண்கள் காயமடைந்துள்ள அதேவேளை இது பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன பர்கன்டி நகரில்உள்ள சலோன் சூர் சோனோன் என்ற பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நகரத்தின் மத்தியில் உள்ள பொதுப்பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நபர் ஓருவர் அல்லாகு அக்பர் என சத்தமிட்டவாறு என சுத்தியலால் தாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தாக்கப்பட்ட இரு பெண்களும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்திலேயே விசாரணை செய்வதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் தாக்குதலை மேற்கொண்ட நபர் மனோநிலை பாதிக்கப்பட்டவராகயிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரியொருவரை நபர் ஓருவர் தாக்கிய சம்பவமொன்றும் பிரான்ஸில் இன்று இடம்பெற்றுள்ளது.

சென்டினெல் என்ற இடத்தில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் எனினும் அந்த அதிகாரி திருப்பி தாக்கி சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More