Home இலங்கை உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய குழு

உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய குழு

by admin


போகம்பரை சிறைச்சாலையில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 30 கைதிகள் நேற்றுக்காலை   முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில்  கைதிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு  ஆதரவளிக்கும் வகையில் வெலிகடை சிறைச்சாலையிலுள்ள 30 கைதிகளும் நேற்று மாலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.    மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தமக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தமது தண்டனைக் காலத்தை 20 வருடங்களான மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் இது    குறித்து ஆராய சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து குழுவொன்றை அமைத்துள்ளது.     இந்தக் குழுவினது அறிக்கை வெகு விரைவில் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More