Home இந்தியாபரோலில் வெளியில் வருகிறாரார் வி.கே.சசிகலா

பரோலில் வெளியில் வருகிறாரார் வி.கே.சசிகலா

by admin

பெங்களுர் சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா நாளை அல்லது நாளை மறுநாள் பரோலில் வெளியில் வர வாய்ப்புள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், வி.கே. சசிகலாலவின் கணவர் நடராஜனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும்  கூறினார்.

மேலும், தற்போதைய ஆட்சியாளர்கள் டெங்குவை விட கொடியவர்கள் என விமர்சித்த தினகரன், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More