Home இலங்கை எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படாது :

எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படாது :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்டபாது என பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளின் விலைகள் உயர்த்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலிய வள அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபபில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஒயில் நிறுவனம் பெற்றோலின் விலையை உயர்த்தினாலும், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலைகளை உயர்த்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுச் சந்தையில் எரிபொருட்களுக்கான விலைகளை உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டால் ஏனைய அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்த்தப்படும் என்ற காரணத்தினால் விலைகள் உயர்த்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையின் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ற வகையில் எரிபொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்யக் கூடிய ஓர் விலைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More