Home இந்தியா இந்திய உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை வழக்கு தள்ளுபடி!

இந்திய உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை வழக்கு தள்ளுபடி!

by editortamil

முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தமிழகத்திற்கு சொந்தமானது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தமிழகத்திற்கு சொந்தமானவை என்று அறிவிக்கக்கோரி தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்த சமூக நீதிக்கான அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

1906ம் ஆண்டு மதுரை மாவட்ட அரச பத்திரிகையின் பிரகாரம் முல்லைப்பெரியாறு அணை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த மனுவை விசாரிப்பதற்கான காரணங்கள் ஏதுமில்லை எனக்கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More