தெவுந்தர – ஹும்மன வீதியில் மூன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க வளையல்கள், காதணிகள் உட்பட 150 கிராம் தங்கம் ஆகியவற்றுடன் மேல் மாகாண காவல்துறை புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரும் மேலும் ஐவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது வாகனத்தின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினா் குறிப்பிட்டுள்ளனா்.
விசாரணையின் போது குறித்த காவல்துறை உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக தொிவித்துள்ள விசேட அதிரடிப்படை அதிகாரிகள் போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணத்தை பகிா்வதற்காக இவர்கள் எடுத்துச் சென்றார்களா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தொிவித்துள்ளனா்.