Home இலங்கை மனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பாகவே அரசியல் கைதிகளை அரசாங்கம் கையாள்கிறது :

மனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பாகவே அரசியல் கைதிகளை அரசாங்கம் கையாள்கிறது :

by admin

மனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பான வகையில் அரசியல் கைதிகளின் விவகாரம் அரசாங்கத்தினால் கையாளப்பட்டு வருகிறது. என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில்  அவ்வமைப்பின் அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமார் வெளிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

யுத்தகால அரசியலின் போது கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவிக்கும் அரசியற் கைதிகள் பொது மன்னிப்பு மூலம் விடுதலை செய்யப்பட வேண்டும். இவர்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணமான அரசியற் சூழல் இன்றில்லை. அந்த அரசியல் சூழலில் செயற்பட்ட 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்து பொதுவாழ்வில் இணைத்துள்ளதைப்போல, இந்த அரசியற் கைதிகளும் பொது மன்னிப்பு மூலமாக விடுதலை செய்யப்பட வேணும் என வலியுறுத்துகிறோம்.

இந்தக் கைதிகளின் வழக்கு விசாரணை, விடுதலைச் சாத்தியங்கள் போன்றன பற்றித் தெரியாத நிலையில்  குடும்பத்தினர் மிகுந்த அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது தமிழ்ச்சமூகத்தின் அரசியற் போக்கினையும் உளவியலையும் ஆழமாகப் பாதித்துள்ளது.

இந்த நிலையிலே வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதியைத் தழுவிய கதவடைப்புப் போராட்டம்  வெள்ளிக்கிழமை  நடைபெறுகிறது. இதற்கு எமது தார்மீக ஆதரவை வழங்கி, இந்தக் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இந்தக் கைதிகளின் குடும்பத்தினரின் உணர்வுகளோடு ஒன்றாகி நிற்கின்றோம். என சமத்துவம்  சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமாh் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More