Home இலங்கை மதவாத அடிப்படையில் அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்தக் கூடாது

மதவாத அடிப்படையில் அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்தக் கூடாது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இனவாத அல்லது மதவாத அடிப்படையில் அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்தப்படக் கூடாது என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கட்டுகுருந்தவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பல அரசியல் கட்சிகள் இனவாத மதவாத அடிப்படையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டை துண்டாடி இனவாத மதவாத அடிப்படையில் பிரிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மாணவர்கள் ஒரே இடத்தில் கல்வி கற்கக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இன ஒற்றுமையை கட்டியெழுப்ப  வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More