Home இலங்கைதுஷார தலுவத்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

துஷார தலுவத்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

by admin


ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, நபர் ஒருவரை தாக்கிய உதவிப் காவல்துறை அத்தியட்சகர் துஷார தலுவத்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை  ஆணைக்குழு கூறியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக  காவல்துறை  ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார். அத்துடன்  தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் ஒப்படைக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அந்தக் குற்றப்பத்திரிகை காவல்துறை மா அதிபரினால் துஷார தலுவத்தவுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தினை தொடர்ந்து    துஷார தலுவத்த மாத்தறை காவல்துறை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவினாலும் இது தொடர்பான விசாரணை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More