இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் சாசனம் தொடர்பில் பொய்யுரைக்க வேண்டாம் என மாநாயக்க தேரர்களிடம் கோரிக்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனம் தொடர்பில் பொய்யுரைக்க வேண்டாம் என மாநாயக்க தேரர்களிடம் கோருவதாக அமைச்சர் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் தொடர்பில் போலியான பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாம் என பௌத்த மாநாயக்க தேரர்களிடம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் வரையில் நாட்டுக்கு பாதகமான எந்தவொரு யோசனைத் திட்டமும் நிறைவேற்றப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பலான தீர்வுத் திட்டத்தை முதன் முதலாக மஹிந்த ராஜபக்ஸவே கோரியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது முக்கியமானது எனவும்  இதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.