Home இலங்கை வடக்கில் 9 மாதங்களில் மட்டும் 87 சிறுவர்கள் மீது துன்புறுத்தல் – திணைக்கள புள்ளவிவரங்கள் தெரிவிப்பு:-

வடக்கில் 9 மாதங்களில் மட்டும் 87 சிறுவர்கள் மீது துன்புறுத்தல் – திணைக்கள புள்ளவிவரங்கள் தெரிவிப்பு:-

by editortamil

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 87 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாண மாவட்டத்திலேயே சிறுவர் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

வடக்கு மாகாண நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 சிறுவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறுவர்களும் மன்னார் மாவட்டத்தில் 9 சிறுவர்களும் வவுனியா மாவட்டத்தில் 17 சிறுவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 24 சிறுவர்களுமாக மொத்தமாக 87 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர் துர்நடத்தைக்கு முயற்சித்ததாக யாழ். மாவட்டத்தில் 7 குற்றச்சாட்டுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 குற்றச்சாட்டுகளும் மன்னார் மாவட்டத்தில் 6 குற்றச்சாட்டுகளும் வவுனியா மாவட்டத்தில் 5 குற்றச்சாட்டுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 குற்றச்சாட்டுகளுமாக மொத்தம் 32 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதே போன்று உடல் ரீதியான முறைகேட்டுக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக யாழ் மாவட்டத்தில் 11 சிறுவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 சிறுவர்களும் மன்னார் மாவட்டத்தில் 14 சிறுவர்களும் வவுனியா மாவட்டத்தில் 8 சிறுவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 11 சிறுவர்களுமாக மொத்தம் 48 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள ரீதியான தாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்ப்பட்டதாக யாழ் மாவட்டத்தில் ஒருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறுவர்களும் மன்னார் மாவட்டத்தில் 11 சிறுவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 5 சிறுவர்களுமாக மொத்தம் 24 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நடப்பாண்டில் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக யாழ் மாவட்டத்தில் 3 சிறுவர்களும் மன்னார் மாவட்டத்தில் 2 சிறுவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 5 சிறுவர்களுமாக மொத்தம் 10 சிறுவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள் என யாழ் மாவட்டத்தில் 23 சிறுவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 சிறுவர்களும் மன்னார் மாவட்டத்தில் 6 சிறுவர்களும் வவுனியா மாவட்டத்தில் 9 சிறுவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 4 சிறுவர்களுமாக மொத்தம் 53 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் இருந்து இடைவிலகிய சிறுவர்கள் யாழ் மாவட்டத்தில் 23 சிறுவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 சிறுவர்களும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் வவுனியா மாவட்டத்தில் 9 சிறுவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 17 சிறுவர்களுமாக மொத்தம் 48 சிறுவர்கள் பாடசாலையை இடைவிலகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நடப்பாண்டில் வடக்கு மாகாண நீதிமன்றங்களில் சிறுவர்கள் தொடர்பில் யாழ் மாவட்டத்தில் 832 வழக்குகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 43 வழக்குகளும் மன்னார் மாவட்டத்தில் 386 வழக்குகளும் வவுனியா மாவட்டத்தில் 478 வழக்குகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 131 வழக்குகளுமாக மொத்தம் ஆயிரத்து 870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – என்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More