Home உலகம் கடந்த மாதம் நைஜீரியாவில் கடத்தப்பட்ட பிரித்தானிய பிரஜைகளில் ஒருவர் கொலை – மூவர் விடுதலை

கடந்த மாதம் நைஜீரியாவில் கடத்தப்பட்ட பிரித்தானிய பிரஜைகளில் ஒருவர் கொலை – மூவர் விடுதலை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த மாதம் நைஜீரியாவின் தென்பகுதியில் கடத்தப்பட்ட பிரித்தானிய    பிரஜையொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என பிரித்தானிய     வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது. நைஜீரீயாவின் எண்ணெய் வளம் நிறைந்த பகுதியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நால்வரில் இயன் ஸ்குயர் ( Ian Squire)  என்பவர் கொல்லப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளுடன் நைஜீரீயாவிற்கான  பிரித்தானிய     தூதரகம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏனைய மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய     பிரஜைகள் வசித்த கிராமப்பகுதி மீது தாக்குதல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியவேளை இவர்கள் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உயிருடன் விடுவிக்கப்பட்ட இருவர் 14 வருடங்களாக நைஜீரீயாவில் வசித்து வருவதாகவும் அவர்கள்  அங்கு மனிதாபிமான பணியில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூவர் விடுவிக்கப்பட்டது குறித்து அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அதேவேளை கொல்லப்பட்டவரின் குடும்பத்தவர்களிற்கு தங்கள்  இரங்கலை தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More