Home இந்தியா பீகாரில் பெண்ணை நாக்கால் தரையை சுத்தம் செய்ய வைத்த கொடூரம் :

பீகாரில் பெண்ணை நாக்கால் தரையை சுத்தம் செய்ய வைத்த கொடூரம் :

by admin

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் முசாஃபர்பூர் பகுதி கிராமத்தில் பஞ்சாயத்தில், பெண் ஒருவரை நாக்கால் தரையை சுத்தம் செய்ய வைத்த கொடூரம் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.   கட்டிட உரிமையாளரான  ராம் துலரி தேவி என்பவர்  வாடகைக்கு இருக்கும் அருண் சிங் என்ற நபர், வாடகையை தராமையினால்   பஞ்சாயத்தை நாடியுள்ளார்.

பஞ்சாயத்து  அருண் சிங்கிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து தீர்ப்பை  வழங்கியதுடன்  ராம் துலரி தேவியை நாக்கால் தரையை சுத்தம் செய்யுமாறு   கொடூர தண்டனையை  வழங்கியுள்ளனர்.

இது குறித்து ராம் துலரி தேவி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பீகார் மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் பஞ்சாயத்தினர் கொடூர தண்டனை வழங்கிய ஒளிப்படமும் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.