Home இலங்கை போலி நாணயத்தாள் அச்சிட்ட கணவருக்கு மறியல் மனைவிக்கு பிணை

போலி நாணயத்தாள் அச்சிட்ட கணவருக்கு மறியல் மனைவிக்கு பிணை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

போலி நாணயத்தாள்களை அச்சிட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியரில் குடும்பத்தலைவரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு உள்ளார்.

அத்துடன் அவரது மனைவி கர்ப்பவதி என்ற காரணத்தால் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் தம்பதியர் அரியாலை மணியந்தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களால் அச்சிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 5,000 ரூபா பெறுமதியான 400 போலி நாணயத்தாள்களும் 1,000 ரூபா பெறுமதியான 168 போலி நாணயத்தாள்களும் அந்த வீட்டிலிருந்து யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்டிருந்தனர்.

தம்பதிகள் இருவரையும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் போலீசார் முற்படுத்தினர்கள். அதனை அடுத்து கணவரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்ட நீதவான் மனைவியை பிணையில் செல்ல அனுமதித்தார் .

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More