Home இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை பற்றி விசாரணை?

பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை பற்றி விசாரணை?

by admin

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சத்தியக் கடதாசிகள் பெற்றுக்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெபரல்  அமைப்பினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, இது தொடர்பிலான சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளனரா இல்லையா என்பது குறித்து அறிந்து கொள்வதற்கு அனைவரிடமும் சத்தியக்கடதாசிகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More