Home இலங்கைநல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது என விஜயகலா மகேஸ்வரன் கவலை.

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது என விஜயகலா மகேஸ்வரன் கவலை.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

நீதித்துறை ,  ஊடக துறை , சட்டத்துறையும் விற்கப்படுகின்றது. இந்த ஜனநாயக நாட்டில் நல்லாட்சி நிலவும் காலத்தில் அவை விற்கப்பட்டு உள்ளது.

ஒரு சில பொறுப்பு உள்ள அதிகாரிகளால் தான் அவை விற்கப்பட்டன. அதனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் தலை குனிந்தது. தருமம் தலை காக்கும் என நம்புகின்றோம்.  அவ்வாறானவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More