Home இலங்கை பிரதமர் நாளை இந்தியாவிற்கு பயணம்

பிரதமர் நாளை இந்தியாவிற்கு பயணம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் இந்தியாவிற்கு பயணம்; செய்ய உள்ளார். உடுப்பி மாவட்டம் கொள்ளுரில் அமைந்துள்ள ஸ்ரீ மூகாம்பிகா ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடும் நோக்கில் பிரதமர் இந்த பயணத்தினை மேற்கொள்ள உள்ளார். சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமரின் இந்த இந்திய பயணத்தில் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடும் நேரத்தில் ஏனைய பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More