Home உலகம் 2ஆம் இணைப்பு – பாகிஸ்தானில் கலவரம் – 6 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம் – பாதுகாப்பு படைகள் குவிப்பு:-

2ஆம் இணைப்பு – பாகிஸ்தானில் கலவரம் – 6 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம் – பாதுகாப்பு படைகள் குவிப்பு:-

by editortamil

பாகிஸ்தான்: கலவரத்தில் 6 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம் - ராணுவம் வரவழைப்பு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் சத்திய பிரமாணம் செய்யும்போது அதில் சில வரிகளை மாற்றி பிரமாணம் எடுக்கலாம் என சட்டத்துறை மந்திரி ஜஹித் ஹமீது சமீபத்தில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவர முயன்றார். இதற்கு பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் சில இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஜஹித் ஹமீது ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஜஹித் ஹமீது எதிராக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு செல்லும் பிரதான சாலைகளில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக சில இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் பல லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து பாகிஸ்தான் காவற்துறையினர்  மற்றும் துணை ராணுவத்தினர், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி விரட்டும் நடவடிக்கையை நேற்று முதல் ஆரம்பித்திருந்தனர்.

இந்த நடவடிக்கையின் போது, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டம் நடைபெற்ற இடம் போர்க்களமானது.

ஆனால் போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தொலைக்காட்சி சேவைகளில்  அரசியல் தொடர்பான விவாதங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையை நேரடியாக ஒளிபரப்புக்கூடாது என்ற உத்தரவை பாகிஸ்தானில் மின்னணு ஊடகங்கள் ஒழுங்கு முறை ஆணையமான ‘பெம்ரா’ பிறப்பித்துள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த போராட்டத்தினால் ஏற்பட்ட கலவரங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பாகிஸ்தானில் அவசர காலநிலை பிறப்பிக்கப்பட்டதை போன்ற சூழல் உருவாகியுள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதையடுத்து அதை சமாலிப்பதற்காக ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கலகம் – காவற்துறை அதிகாரி கொலை- தனியார்  தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டது – வீதிகளில் மக்கள் …

பாகிஸ்தானில் போக்குவரத்தை முடக்கிய இஸ்லாமிய கடும்போக்காளர்களுக்கும்  பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்மூபட்ண்டட  மோதலில் ஒரு காவற்துறை அதிகாரி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம்
படத்தின் காப்புரிமைAFP

சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீதினை பதவி நீக்கவேண்டும் எனக் கோரி முக்கிய நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் பல வாரங்களாக மறித்து வருகிறார்கள். இதனால், தலைநகர் இஸ்லாமாபாத் கிட்டத்தட்டமுடங்கியுள்ளது.

போராட்டக்காரர்களை நோக்கி காவற்துறையினர் இன்று  சனிக்கிழமை ரப்பர் குண்டுகளை சுட்டதோடு கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். அதிலும் கலைந்து போகாத போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசியுள்ளனர்.

இதைனையடுத்து போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளின் சேவைகளை பாகிஸ்தான் அரசாங்கம் துண்டித்து.ள்ளது

கலவரம்

தேர்தல் சீர்திருத்தச் சட்டம் 2017ல் செய்யப்பட்ட திருத்தத்துக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டம் 20 நாளாக நடந்து வந்தது. இந்த சட்டத்திருத்தம் முகமது நபியே இறைவனின் கடைசி தூதர் என்ற இஸ்லாமியக் கருத்தை மறுதலிக்கும் வகையில் இருந்ததாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத்தை பதவி நீக்கவேண்டும் என்று கடும்போக்கு இஸ்லாமியவாத அமைப்பான டெஹ்ரீக்-ஐ-லபைக் யா ரசூல் அல்லா கட்சியின் அஷ்ரஃப் ஜலாய் அணியும், சுன்னி டெஹ்ரீக் அமைப்பும் கோரி வருகின்றன.

இந்தப் பிழையினை சரி செய்துவிட்டதாக அரசு விளக்கமளித்தாலும், இது மத நிந்தனைக்கு ஒப்பானது என்று கடும்போக்காளர்கள் வருணித்து வருகின்றனர்.

இஸ்லாமாபாத் நகரிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நகரில் தடி ஏந்திய இளைஞர்கள் மக்களைத் துன்புறுத்திக்கொண்டும் அச்சுறுத்திக்கொண்டும் செல்வதால் மக்கள் நடமாடுவது கடினமாகியுள்ளது என பிபிசி உருது சேவை செய்தியாளர் தபிண்டா கௌகாப் தெரிவிக்கிறார்.

8,500 பாதுகாப்புப் படையினர் போராட்டக் காரர்களைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 370 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் நடவடிக்கைக்குப் பதிலடியாக போராட்டக்காரர்கள் நான்கு போலீஸ் வேன்களுக்கும் ஒரு பேருந்துக்கும் தீ வைத்ததாக பிபிசி உருது செய்தியாளர் ஷாசாத் மாலிக் தெரிவித்துள்ளார்.

கலவரம்
படத்தின் காப்புரிமைEPA

இஸ்லாமாபாத்தின் முக்கியச் சாலை ஒன்றை ஆக்கிரமித்து போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை போலீசார் அழித்தனர். கலவரங்களின்போது 111 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒளிபரப்பக்கூடாது என்ற உத்தரவை மீறியதாகக் கூறி எல்லா செய்தி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பையும் பாகிஸ்தான் மின்னணு ஊடக முறைப்படுத்தல் ஆணையம் துண்டித்துள்ளது. அரசுத் தொலைக் காட்சியான பாகிஸ்தான் டிவி தவிர எந்த தொலைக்காட்சி சேனலும் தற்போது செயல்படவில்லை. இந்தக் கலவரத்தைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற பல பத்திரிகையாளர்களும் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. (  மூலம் – bbc)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More