Home இலங்கை அம்பாந்தோட்டை துறைகத்தில் வேலைசெய்யும் 400 இற்கும் மேற்பட்டோர் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்

அம்பாந்தோட்டை துறைகத்தில் வேலைசெய்யும் 400 இற்கும் மேற்பட்டோர் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்

by admin


நல்லாட்சி அரசு   அரச வளங்களையும், சொத்துகளையும் வெளிநாடுகளுக்குத் தாரை வார்க்கும் செயற்பாட்டையே  முன்னெடுத்து வருவதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

துறைமுக மற்றும் கப்பற்போக்குவரத்து அலுவல்கள், தொழில் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான விவாதம் மீது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பு துறைமுகத்தின் சில பகுதிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது குறித்து கருத்துகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த அவர்  அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஏற்படுத்திய நிலையை கொழும்பு துறைமுகத்திற்கும் ஏற்படுத்திவிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளர்h.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை   தனியார் மயப்படுத்தியதால் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும்  இந்த உடன்படிக்கை காரணமாக அம்பாந்தோட்டை துறைகத்தில் வேலைசெய்யும் 400 இற்கும் அதிகமானவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More