Home இலங்கை சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கு மஹிந்த அணியும் கட்டுப்பணம் செலுத்தியது

சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கு மஹிந்த அணியும் கட்டுப்பணம் செலுத்தியது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவத்றகாக மகிந்த ராஐபக்ச அணியின் கட்சியான சிறிலங்கா பொதுஐன முன்னணி யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது.

தாமரை மொட்டு சின்னத்தில் அந்தக் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. ஈபிடிபியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்களே மகிந்த ஆதரவு இந்தக் கட்சியில் இணைந்து யாழ்ப்பபாண மாவட்டத்தின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளனர்.

இதேவேளை, சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக ஈபிடிபி முதன்முதலாக கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More