Home உலகம் பாகிஸ்தானில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி :

பாகிஸ்தானில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி :

by admin


பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று முகமூடி அணிந்த தீவிரவாதிகள்  மேற்கொண்ட  துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், புர்கா அணிந்தபடி இந்த பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 4 தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால்  சுட்டுள்ளனர் எனவும்  இந்த   தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 15 பேர் காயமடைந்ததாகவுமதெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை  தாக்குதல் நடத்திய 4 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும்  தெரிவிக்கப்படுகின்ற  நிலையில் இச்சம்பவத்துக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  தங்களது தாக்குதலின் இலக்கு பல்கலைக்கழகம் அல்ல என்றும் அருகாமையில் உள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அலுவலகத்தை நடந்த முயற்சி என்றும் தெஹ்ரிக்-இ-தலிபான் வெலியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More