Home இந்தியா உலகிலேயே, அதிக அளவில், இராணுவ வீரர்கள் தற்கொலை செய்வது இந்தியாவில்….

உலகிலேயே, அதிக அளவில், இராணுவ வீரர்கள் தற்கொலை செய்வது இந்தியாவில்….

by admin

உலகிலேயே இந்திய ராணுவத்தில் தான் அதிக அளவில் வீரர்கள் தற்கொலை செய்கின்றனர்- வருடத்துக்கு 1600 வீரர்கள் உயிரிழப்பு இந்தியாவில் விபத்து, தற்கொலை மற்றும் தீவிரவாதத் தாக்குதல்கள் காரணமாக வருடத்துக்கு 1600 ராணுவ வீரர்கள் உயிரிழந்து வருகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உட்பட மொத்தம் 13 லட்சத்து 49 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். அவர்களில் ராணுவத்தில் 11 லட்சத்து 32 வீரர்களும், 41 ஆயிரம் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். விமானப்படையில் 12 ஆயிரம் அதிகாரிகளும், 1 லட்சத்து 3 ஆயிரம் வீரர்களும், கடற்படையில் 9 ஆயிரம் வீரர்களும், 52 ஆயிரம் வீரர்களும் உள்ளனர்.

இறுதியாக 1999-ம் ஆண்டில் கார்கில் போர் நடைபெற்றதன்பின்னர் போர் எதுவும் நடைபெறவில்லை என்ற போதிலும் வருடத்துக்கு 1600 ராணுவ வீரர்கள் உயிரிழந்து வருகிறார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கப்பல் விபத்துக்கள் மூலமும், தற்கொலை மற்றும் ராணுவ வீரர்களுக்குள் ஏற்படும் மோதல் போன்றவற்றினால் வீரர்கள் உயிரிழக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் அதிக கட்டுப்பாடுகள், குடும்ப பிரச்சினைகள், வேலைப்பளு போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் நடைபெறுகின்றன. இதுதவிர காஷ்மீர் எல்லைக் கோடு கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடைபெறும் சண்டை மற்றும் ஊடுருவும் தீவிரவாதிகளுடன் ஏற்படும் மோதலிலும் உயிரிழக்கின்றனர். இதன்மூலம் உலகிலேயே இந்திய ராணுவத்தில் தான் அதிக அளவில் வீரர்கள் தற்கொலை செய்கின்றனர் என்ற நிலை உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More