Home உலகம் ஜெருசலம் – பெரும் பிரச்சனையை உருவாக்க அமெரிக்கா நினைக்கிறதா? பிரான்ஸ் கேள்வி…

ஜெருசலம் – பெரும் பிரச்சனையை உருவாக்க அமெரிக்கா நினைக்கிறதா? பிரான்ஸ் கேள்வி…

by admin

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா எடுத்துள்ள முடிவுக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் பெரும் பிரச்சனையை உருவாக்க அமெரிக்கா நினைக்கிறதா என பிரான்ஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ஆறு நாள் போர் என வரலாற்றில் குறிப்பிடப்படும் 1967 மத்திய கிழக்கு போரின் போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியதுடன்; அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகின்றது.

இந்தநிலையில் கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என பேசியிருந்தார். ஆத்துடன்; இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க தயாராக அமெரிக்கா இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  ரெக்ஸ் டில்லர்சனிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ள ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், பிரான்ஸ மற்றும் , துருக்கி நாடுகளின் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

இந்நிலையிலேயே இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சனையை உண்டாக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்h.

பிரான்சை பொருத்தவரை இவ்விவகாரத்தில் எந்த முடிவும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More