Home பிரதான செய்திகள் மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவருக்கு தடை

மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவருக்கு தடை

by admin


நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  மெதுவாக பந்து வீசியதன் காரணமாக, 2-வது டெஸ்ட் போட்டியில்  விளையாடுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் ஹோல்டருக்கு   தடைவிதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கும்  இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

கடந்த முதலாம் திகதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ; நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருந்தது.  இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிப்பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை  என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்திற்குள் 3 ஓவர் குறைவாக வீசப்பட்டதனால் ஒரு ஓவருக்கு சம்பளத்தில் 10 சதவீதம் என மேற்கிந்திய தீவுகள்  வீரர்களுக்கு தலா 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அதேவேளை அணித்தலவர்  ஹோல்டருக்கு   60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன்  2-வது டெஸ்ட் போட்டியில்  விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More