Home உலகம் ஜெர்மனியின் Düsseldorf ல் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன…

ஜெர்மனியின் Düsseldorf ல் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன…

by admin

ஜெர்மனியின் தியூசல்டோர்ஃபு பகுதியில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூர் நேரப்படி சுமார் 6:30 மணியளவில் 150க்கும் மேற்பட்டோருடன்  சென்று கொண்டிருந்த பயணிகள் புகையிரதம் எதிர்பாராத விதமாக சரக்கு புகையிரதம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 6 பேர் காயமடைந்துள்ளதாக மீர்பஸ்க் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ள போதிலும் காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் இந்த  விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More