Home இலங்கை விடுதலைக்காக போராடினோம் என கூறியவர்கள், பதவிக்காகவும் கதிரைக்காகவும் தமக்குள் மோதிக்கொள்கின்றனர்:-

விடுதலைக்காக போராடினோம் என கூறியவர்கள், பதவிக்காகவும் கதிரைக்காகவும் தமக்குள் மோதிக்கொள்கின்றனர்:-

by admin

உள்ளூராட்சி சபைகளை இலஞ்சம் ஊழல் மோசடிகளில் இருந்து மீட்டு எடுப்போம். – ஜே.வி.பி.

யாழ்.மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தினை மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று வெள்ளிக்கிழமை செலுத்தியுள்ளனர். அது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கையில் ,

யாழ்.மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை , சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் வலி.மேற்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கான கட்டுப்படத்தினை இன்றைய தினம் செலுத்தி உள்ளோம். மேலும் மூன்று சபைகளுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தவுள்ளோம்.

மக்கள் விடுதலை முன்னனியினர் லஞ்ச ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட உள்ளோம். கடந்த காலத்து உள்ளூராட்சி சபைகள் ஊழல் இலஞ்சம் நிறைந்து காணப்பட்டன. அதில் இருந்து உள்ளூராட்சி சபைகளை மீட்டு எடுப்போம். அரசியல் களியாட்டத்தில் கடந்த காலத்தில் நாட்டின் விடுதலைக்காக கொள்கைக்காக போராடினோம் என கூறியவர்கள் இன்று பதவிக்காகவும் கதிரைக்காகவும் தமக்குள்ள மோதிக்கொள்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More