Home இலங்கை மஹிந்தவை பாதுகாப்பது அரசாங்கத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் – பிரதமர்

மஹிந்தவை பாதுகாப்பது அரசாங்கத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பாதுகாப்பது அரசாங்கத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.    மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஏதேனும் ஆபத்துக்கள் வருவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவின் பாதுகாப்பு குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டே மஹிந்தவிற்கான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் தமக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு மஹிந்த ராஜபக்ஸ இதுவரையில் சட்டம் ஒழுங்கு  அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என   குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து கவனம் செலுத்தப்பட முடியும் என குறிப்பிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு வழங்குவது தமக்கு நன்மையை ஏற்படுத்துமே தவிர தீமையாகாது என   தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More