Home இலங்கை ஊடகங்களில் ஜோதிட நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் – ஜே.வி.பி

ஊடகங்களில் ஜோதிட நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் – ஜே.வி.பி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊடகங்களில் ஜோதிட நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் என ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை முதனிலையாகக் கொண்டு போலிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரை அனுமதிக்கக் கூடாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகங்களில் ஜோதி நிபுணர்கள், அழகுக் கலை நிபுணர்கள் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவோருக்கு எதிராக அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இவ்வாறு நிகழ்ச்சி நடாத்துவோரின் நிகழ்ச்சிகளுக்கு கீழே இது கட்டணம் செலுத்தப்பட்டு ஒளிபரப்புச் செய்யப்படும் நிகழ்ச்சி என்றேனும் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More