Home இலங்கை சிறுமியை கடத்திய உறவினருக்கு விளக்கமறியல்

சிறுமியை கடத்திய உறவினருக்கு விளக்கமறியல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்ற உறவினரை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.  புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 13வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவர் சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 05ஆம் திகதி தன்னுடன் அழைத்து சென்று வவுனியாவில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

அந்நிலையில் சிறுமியை காணாத பெற்றோர் சிறுமியை தேடி அலைந்ததுடன் , சிறுமி காணாமல் போனமை தொடர்பிலும் சுன்னாகம் காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.  குறித்த சிறுமியை உறவினர் முறையான ஒருவரே அழைத்து சென்று தன்னுடன் தங்க வைத்துள்ளார் எனும் தகவல் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் பெற்றோர் அறிந்து கொண்டனர்.

அதனை அடுத்து குறித்த உறவினரை பிடித்து சுன்னாகம் காவல்துறையினரிடம் பெற்றோர்கள் ஒப்படைத்துள்ளனர். அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர்  சிறுமியை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்திய பரிசோதனையில் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகப்படவில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More