Home இந்தியா ஒட்டிப் பிறந்த இரட்டையரை பிரித்தெடுத்தனர் வைத்தியர்கள்..

ஒட்டிப் பிறந்த இரட்டையரை பிரித்தெடுத்தனர் வைத்தியர்கள்..

by admin


ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் 12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் தனித்தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர். மும்பை காட்கோபரை சேர்ந்த ஷீத்தல் கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்தார். 24 வார கர்ப்ப காலத்தின்போது, ஸ்கான் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் ஒட்டி வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் குழந்தையை பெற்றெடுக்க ஷீத்தல் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தீர்மானித்தனர்.

கடந்த ஆண்டு மும்பை பரேல் தனியார் மருத்துவமனையில் ஷீத்தலுக்கு பிரசவம் ஆனது. வயிறு மற்றும் இடுப்பு பகுதி ஒட்டிய நிலையில் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இதனையடுத்து ஒட்டிப்பிறந்த 2 குழந்தைகளையும் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க வைத்தியர்கள் முடிவு செய்திருந்தனர். இதன்படி அந்த குழந்தைகள் பிறந்து ஒரு ஆண்டுக்கு பின் நேற்றுமுன்தினம் அந்த தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை 20 வைத்தியர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர்.

12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் 2 குழந்தைகளும் தனித்தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன.அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More