Home இலங்கை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உள்ளது. மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் ஊர்காவற்துறை நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து ஊர்காவற்துறை காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரை கூறி கொலை அச்சுறுத்தல் விடுத்து இருந்தார்.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை காவல்துறையினர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்,

குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம் புதன்கிழமை பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது பதில் நீதவான் கட்டளைக்காக எதிர்வரும் 03ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அன்றைய தினம் வரையில் சந்தேகபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More