Home உலகம் கனடா – பிரேசில் தூதரக அதிகாரிகளை வெனிசுலா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

கனடா – பிரேசில் தூதரக அதிகாரிகளை வெனிசுலா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

by admin

சட்டவிதிமுறைகளை மீறி தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதாக தெரிவித்து கனடா மற்றும் பிரேசில் தூதரக அதிகாரிகளை வெனிசுலா அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.  வெனிசுலாவில் சில மாதங்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய சபையை கலைத்து விட்டு புதிதாக அரசியல் சாசன சபையை ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ (Nicolas maduro) அமைத்திருந்தார்.

ஆளும் கட்சியே முழுமையாக இந்த சபையில் பங்கு வகிப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் நடத்தியபோராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தநிலையில் ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு சில தடைகளையும் விதித்தன.  இந்தநிலையில் கனடாவில் உள்ள வெனிசுலா தூதரக அதிகாரிகள் ஊழல் மற்றும் மனித உரிமைகளை மீறியதாக கூறி அவர்கள் மீது சில தடைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று திடீரென கனடா மற்றும் பிரேசில் தூதுவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு வெனிசுலா உத்தரவிட்டுள்ளது. தூதரக அதிகாரிகளுக்கான சட்டதிட்டங்களை மேற்கண்ட இருவரும் ஒழுங்காக கடைபிடிக்க வில்லை எனவும், வெனிசுலாவின் உள் விவகாரங்களில் தலையிட்டார்கள் எனவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More