Home உலகம் பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 37 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 37 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

by admin


பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் தவாவோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்திருக்கலாம் என அந்நகரின் துணை மேயர் தெரிவித்துள்ளார். நேற்று காலை அதிகமான மக்கள் கூடியிருந்த வேளை வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் எதிர்பாராத ஏற்பட்ட தீயானது ஏனைய தளங்களுக்கும் பரவியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து, கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை எனவும் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கட்டிடத்திற்குள் மேலும் 37 பேர் சிக்கியிருக்கலாம் எனவும் இவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More