இந்தியா சினிமா பிரதான செய்திகள்

நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு….

சூளைமேடு காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயர்நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களை வழங்கி முறைப்பாட்டுக்காரரை மிரட்டியதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூளைமேட்டில் தனிஒருவருக்கு சொந்தமான 3375 சதுர அடி நிலத்தை நடிகர் மன்சூர் அலிகான் ஆள்மாறாட்டம், விரல்ரேகை மோசடி செய்து நில அபகரிப்பு செய்ததாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு நடிகர் மன்சூர் அலிகானும், அவரது மனைவியும் நீதிமன்றத்தில் எதிர் பிரமாண வாக்குமூலம் போலியாக தயாரித்து தாக்கல் செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் மற்றும் அவரது மனைவி மீது நீதிமன்றமே வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் இது தொடர்பாக மன்சூர் அலிகான் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குறித்த காணி உரிமையாளரின் மகன் , சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததனையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் அவரது மனைவி மீது சூளைமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.