Home இந்தியா லதா ரஜினிகாந்தின் வியாபார நிலையத்தை காவற்துறையின் உதவியுடன் மாநகராட்சி பொறுப்பெடுக்கலாம்…

லதா ரஜினிகாந்தின் வியாபார நிலையத்தை காவற்துறையின் உதவியுடன் மாநகராட்சி பொறுப்பெடுக்கலாம்…

by admin


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள லதா ரஜினிகாந்தின் வியாபார நிலையத்தை காவற்துறையின் உதவியுடன் மாநகராட்சி பொறுப்பெடுக்கலாம் என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு உரித்தான வியாபார நிலையங்களில் ஒன்றை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா வாடகை அடிப்படையில் பெற்று, ‘டிரவல்ஸ் எக்சேஞ்ச் இந்தியா’ என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த வியாபார நிலையத்திற்கு வாடகையாக மாதம் 3702 ரூபாய் செலுத்தி வந்தார். திடீரென அதன் வாடகையை 21 ஆயிரத்து 160 ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மாநகராட்சி அளித்த பதில் மற்றும் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன், கடை வாடகை உயர்த்தப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில்,  பல ஆண்டுகளாக அந்த இடத்தில் தொழில் செய்து வருவதால் மாநகராட்சி வாடகையை ஏற்பதா? வேண்டாமா? என்று லதா ரஜினிகாந்த் முடிவு செய்து கொள்ளலாம். லதா ரஜினிகாந்துக்கு கடை தேவைப்படும் பட்சத்தில் ஒரு மாதத்தில் அதற்கான தொகையை செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த வியாபார நிலையத்தை மாநகராட்சி ஏலத்தில் விடலாம். ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதனை எதிர்த்து லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தை நாடலாம் என்பதால், ஏலம் அறிவிக்கப்பட்ட பின்னரும் அவர் நிலையத்தை வழங்க மறுத்தால், காவல்துறை உதவியுடன் அவர் அனுபவித்து வரும் வியாபார நிலையத்துள்  சென்னை மாநகராட்சி பிரவேசித்து வியாபார நிலையத்தை விட்டு வெளியேற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More