Home இலங்கை“எனக்கு நம்பிக்கை இருக்கின்றது சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று.”

“எனக்கு நம்பிக்கை இருக்கின்றது சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று.”

by admin

“இடைக்கால அறிக்கையில் நாங்கள் அரைவாசி வெற்றியை பெற்றுள்ளோம்” என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு, சகல அதிகாரங்களும் மத்தியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, ஆட்சியதிகாரங்கள் மத்தியிலும் மாகாணங்களிலும் இருக்கும் எனச் சொல்லுகின்ற அடிப்படை மாற்றமே இடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களிலும் இருக்கிறது என,  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறைகள் பற்றி வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் சந்திப்பு ஒன்று நேற்று நல்லூர் இளம்கலைஞர் மண்டபத்தில், யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான சோ.மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,  “உத்தேச அரசியல் அமைப்பு இந்த நாட்டை இரண்டு துண்டாக பிரிக்கும் எனவும்,  சமஸ்டி ஆட்சியை கொண்டு வருகின்றனர் எனவும், இந்த சமஸ்டி ஒரு பிரிவினைக்கு முதற்படியாக இருக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார்.  அதேபோல்  உத்தேச அரசியல் அமைப்பில் சமஸ்டியே இல்லை என நம்மவர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் நாங்கள் மக்களுக்கு கொடுத்த ஆணையினையே அரசியல் தீர்வில் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையின்படியே சயற்படுகின்றோம். எனக்கு நம்பிக்கை இருக்கின்றது சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று.  இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்று அந்த இடைக்கால அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.  இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. அனால் சமஷ்டி கட்டமைப்பிலான ஆட்சி முறையே இந்த அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.  அடிப்படையிலேயே ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டிக்கான மாற்றத்தை காண்பிக்கின்ற அறிக்கையாகவே இந்த இடைக்கால அறிக்கை இருக்கின்றது.” என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More