Home இலங்கை சைட்டம் மாணவர்களுக்கு மேலதிக மருத்துவ பயிற்சியுடன் மருத்துவ பட்டம் வழங்க இலங்கை மருத்துவ சபை இணக்கம்

சைட்டம் மாணவர்களுக்கு மேலதிக மருத்துவ பயிற்சியுடன் மருத்துவ பட்டம் வழங்க இலங்கை மருத்துவ சபை இணக்கம்

by admin


சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மேலும் மருத்துவப் பட்டம் வழங்குவதற்கு இலங்கை மருத்துவ சபை இணங்கியுள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரிலயல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பீட மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்ததன் மூலம் அவர்களது 08 மாத காலத்தை வீணடித்து விட்டதாக தெரிவித்த அவர் இதன் மூலம் அவர்கள் தமது 08 மாத முக்கியத்துவத்தினையும் இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் அவர்களுக்கே நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் வேறு யாருக்கும் நட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More