Home உலகம் தன் மகளையே 8 குழந்தைகளுக்கு தாயாக்கியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை…

தன் மகளையே 8 குழந்தைகளுக்கு தாயாக்கியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை…

by admin

அர்ஜென்டினாவில், தன் சொந்த மகளையே எட்டுக் குழந்தைகளுக்கு தாயாக்கிய நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடக்கு அர்ஜென்டினாவில் உள்ள வில்லா பல்னேரியா என்ற நகரத்தில் 57 வயதான டொமிங்கோ புலோசியோ என்பவரே கடந்த 20 ஆண்டுகளாக தனது சொந்த மகளை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தியுள்ளார்.

11வது வயதிலிருந்து தன்னை பாலியல் அடிமையாக தனது தந்தை வைத்திருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் இறந்திருக்கக் கூடும் அல்லது குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கக் கூடும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பிறந்த இரு சகோதரர்கள் வேறு இடத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், இவர் மட்டும் 11 வயதிலேயே தனது தாயின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கபட்ட பெண்ணுக்குப் பிறந்த எட்டு குழந்தைகளுக்கும் டொமிங்கோதான் தந்தை என டி என் ஏ பரிசோதனை முடிவுகள் உறுதி செய்துள்ளன. 2016ம் ஆண்டு தன் குழந்தையை மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்ற போது குழந்தையின் தந்தை குறித்து அங்கு தகவல் கேட்கப்பட்டதையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துர்ள்ளதனையடுத்து தப்பியோடிய டொமிங்கோ, 45 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

தன் தந்தையின் துன்புறுத்தல் குறித்து வெளியே தெரிவித்ததில் இருந்து, குடும்ப உறுப்பினர்கள் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குறித்த பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More